Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Gavitha / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.அரசரட்ணம்
கிளிநொச்சி, புலோப்பளை கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக, ஐ.சி.ஆர்.சி நிறுவனம் 3.65 மில்லியன் ரூபாய் பெறுமதியான கடற்றொழில் உபகரணங்களை வழங்கவுள்ளது.
மேற்படி கிராமத்தைச் சேர்ந்த 46 மீனவர்களுக்கு படகுகள், வலைகள், வெளியிணைப்பு இயந்திரங்கள் ஆகியவை இவ்வாறு வழங்கப்படவுள்ளன.
அதாவது, 40 மீனவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வலைகளும் 5 மீனவர்களுக்கு தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இயந்திரங்களும், ஒரு மீனவருக்கு 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான இயந்திரத்துடன் கூடிய படகும் வழங்கப்படவுள்ளது.
மீன்பிடி உபகரணங்கள் இல்லாமையால் வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்த முடியாமல் இருக்கின்றது என்று மேற்படி மீனவர்கள் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் பலனாக இந்த உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது.
மேற்படி உபகரணங்கள் புலோப்பளை கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் வைத்து எதிர்வரும் நாளை மறுதினம் வியாழக்கிழமை (03) அன்று வழங்கப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .