2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாந்தை கிழக்கு சனசமூக நிலையங்களுக்கு நிதியுதவி

Gavitha   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

முல்லைத்தீவு, மாந்தை கிழக்குப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட 14 சனசமூக நிலையங்களுக்கு வடமாகாண சபையால் தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

சனசமூக நிலையங்களின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.உதயசீலன், நிதியுதவிக்கான காசோலைகளை சனசமூக நிலையங்களின் தலைவர்களிடம் கையளித்துள்ளார்.

சனசமூக நிலையங்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி பிரதேச செயலகப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட 18 சனசமூக நிலையங்கள் இருக்கின்ற நிலையில், அவற்றில் சிறப்பாக இயங்குகின்ற 14 சனசமூக நிலையங்களுக்கு மேற்படி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X