2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மந்திரிமனை பகுதியில் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம், கல்வியங்காட்டுப் பகுதியில் அமைந்துள்ள மந்திரிமனையிலிருந்து சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தப் பகுதியில் அநாதரவான நிலையில் சுற்றித் திரிந்த வயோதிபரே இவ்வாறு சடலமாக  மீட்கப்பட்டுள்ளார்.  
சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாண இராச்சியத்தின் இறுதி மன்னனான சங்கிலிய மன்னன் இராச்சியத்தில் இந்த மந்திரிமனை உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது யாழ்ப்பாணத்திலுள்ள சுற்றுலா தளங்களில் ஒன்றாக தற்போது காணப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X