2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

டெங்கு நோயாளிகள் அதிகரிப்பு...

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை சுகாதார வைத்திய அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்தார். 

இவ்வருட ஜனவரி மாதம் தொடக்கம் இம்மாதம் வரையான காலப்பகுதிக்குள் கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் 8,590 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு, செவ்வாய்க்கிழமை (08) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனடிப்படையில் கொழும்பு நகரில் 2,360 டெங்கு நோயாளர்களும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் 6,230 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். 

இவற்றில் இம்மாதத்தில் மாத்திரம் அதாவது எட்டே நாட்களில் கொழும்பை அண்மித்த பகுதிகளில் சுமார் 49 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, நாடளாவிய ரீதியில் இவ்வருடத்தில் 26,243 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவற்றில் கொழும்பு நகரிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன்,  அடுத்ததாக கம்பஹா மாவட்டத்தில் 3,649 டெங்கு நோயாளர்களும் யாழ்ப்பாணத்தில் 1,626 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். 

அம்பாறை மாவட்டத்தில் 56 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதுவே நாடளாவிய ரீதியில் மிகக் குறைவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட மாவட்டம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் புள்ளிவிவரத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .