2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

'அப்பே கம' அபிவிருத்தி செய்யப்படும்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பத்தரமுல்லை ஜனகல கேந்திர நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 'அப்பே கம' (எங்கள் கிராமம்), 300 மில்லியன் ரூபாய் செலவில் அடுத்த வருடம் அபிவிருத்தி செய்யப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

பாரம்பரிய கைத்தொழில்கள் செழித்திருக்க, மக்கள் எளிய முறையில் வாழ்ந்து திருப்தி கண்ட விவசாய - பொருளாதாரத்தால் நிர்வகிக்கப்பட்ட சமூகத்தைக்கொண்ட பண்டைய கால கிராமங்களின் பிரதிமையாக 'அப்பே கம' உள்ளது.

இலங்கையின் பாரம்பரிய கைத்தொழில், கலாசாரம் என்பவற்றை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விளக்கும் நோக்கத்தில் 'அபே கம' 2005இல் நிறுவப்பட்டது. 

இதன் மூலம் இதுவரை 37 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .