2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஈழத்தின் பொப்பிசைப் பாடலாசிரியர் கமலநாதன் காலமானார்

Gavitha   / 2016 ஜனவரி 26 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈழத்தின் பிரபலமான  பொப்பிசைப் பாடல்கள் பலவற்றின் ஆசிரியரும் பிரபல கால்பந்தாட்ட மத்;தியஸ்தருமான எம்.எஸ் கமலநாதன், நேற்று  (25) திங்கட்கிழமை வடமராட்சி, வதிரியில் காலமானார்.

புகழ்பெற்ற பல பாடல்களை எழுதி, இசையமைத்த கமலநாதன், பல்வேறு விருதுகளைப் பெற்றதோடு, இலங்கையில் மாத்திரமன்றி, தமிழகத்திலும் மிகவும் பிரபல்யமாயிருந்ததும் குறிப்படத்தக்கது.

 யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான இவர், பாடசாலைப் பருவத்தில் கால்பந்தாட்ட, கிரிக்கெட் அணிகளில் இடம்பெற்றதோடு, அதன் பின்னர், பிரபல கால்பந்தாட்ட நடுவராகவும் இருந்துள்ளார்.

 எட்டுப் பிள்ளைகளின் தந்தையான இவரது இறுதிக் கிரியைகள், இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .