2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புங்குடுதீவு மாணவி விவகாரம்: ஊடகவியலாளரிடம் விசாரணை

Thipaan   / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில், நீதிமன்றத்துக்கு வெளியில் வைத்து சந்தேகநபர்கள், பொலிஸார் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில், அச்செய்தியுடன் தொடர்புடைய ஊடகவியலாளர், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (05) விசாரிக்கப்பட்டார்.

மாணவி கொலை வழக்கு மன்றில் நடைபெற்ற பின்னர் வெளியில் வந்த சந்தேகநபர்கள், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கொலை செய்யப்போவதாக மிரட்டியதாக, யாழ்;ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டது.

அந்தச் செய்தி தொடர்பில் விளக்கமளிப்பதற்காகவே, குறித்த ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, சுமார் 3 மணித்தியாலங்கள் வரையில் விசாரணை இடம்பெற்றுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .