2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஹெரோய்னுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

George   / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோய்ன் போதைபொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் வெளிநாட்டவர் ஒருவர் கொள்ளுப்பிட்டியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த வெளிநாட்டவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரிடமிருந்து 1 கிலோகிராம் அளவிலான ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

55 வயதுடைய பாகிஸ்தான் நாட்டு பிரஜையே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .