2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

லண்டன் வாழ் தமிழ் வைத்தியர்கள் நிறுவனத்துடன் அமைச்சர் சத்தியலிங்கம் சந்திப்பு

Niroshini   / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வடக்கு மாகாண சுகாதார துறையின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பில் இலண்டன் வாழ் தமிழ் வைத்தியர்களை  வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டொக்டர் ப.சத்தியலிங்கம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலண்டனுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமைச்சர், வடக்கின் எதிர்கால அபிவிருத்தி விடயமாக அங்கு வாழுகின்ற வைத்தியர்களின் பங்களிப்பு தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சரின் ஊடக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவதுஈ

இந்த சந்திப்பின்போது, வடக்கு மாகாணத்தில் இயங்கும் பல்கலைகழக மாணவர்களை மேற்படிப்புக்காக இலண்டன் பல்கலைகழகங்களில் அனுமதித்தல், வட,கிழக்கு மாகாணங்களில் கிராமிய ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரத்தை உயர்த்துதல், வடக்கு மாகாணத்தில் வதியும் மக்களின் பொருளாதார மேம்பாடு, வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ள நீண்டகால உபாணத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .