2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

முறையற்ற வழித்தடம் இன்றி சேவையில் ஈடுபட்ட பஸ் தடுத்து வைப்பு

Niroshini   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுற்றுலா சேவையில் ஈடுபடுவதற்குரிய வழித்தட அனுமதியை பெற்று கொழும்பு-யாழ்ப்பாணம் பஸ் சேவையில் ஈடுபட்ட தனியார் பஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (08) இரவு, கொடிகாமம் சந்திப்பகுதியில் குறித்த பஸ்ஸை பொலிஸார் சேதனையிட்ட போது, வழித்தட அனுமதி இன்றி கொழும்பு-யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த பஸ் பாணந்துறை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு சொந்தமானது எனவும் அவர் சுற்றுலா சேவையில் ஈடுபடுவதற்கு வழி அனுமதியை பெற்று போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பயணிகள் அனைவரும் வேறு ஒரு பஸ்ஸில் அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் பஸ், பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .