2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'பழமை வாய்ந்த பியூகல்'

Sudharshini   / 2016 பெப்ரவரி 08 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

பழமை வாய்ந்த பியூகல் ஒன்று, ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் உள்ளதென ஹட்டன் பொலிஸ் நிலைய அத்தியட்சகர் மஹிந்த தஸாநாயக்க தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

'பிரித்தனியர் ஆட்சி காலத்தில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பியூகல், இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோத்தர்கள் யுத்தத்தில் உயிரிழந்த பின்னர்; அவர்களை நல்லடக்கம் செய்யும் பொழுது, மரியாதை செலுத்துவதற்காக ஊதப்படும்.

இந்த பியூகல், 1912ஆம் ஆண்டு ஹன்றி போட்டன் கம்பனியாளர்களால் தயாரிக்கப்பட்டது.  இந்த பியூகல் இன்றும் பாவனையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், 1924ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பியூகல் ஒன்று கேகாலை பொலிஸ் நிலையத்தில் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .