2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விவசாய நிலத்தை அபகரிக்காதீர்கள்

Niroshini   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்டத்தில் விவசாய பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு வவுனியா விவசாய ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்துள்ள வயல் நிலத்தை அபகரிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிக்கு வவுனியா மாவட்ட விவசாய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக விவசாய அமைப்புகள் வட மாகாண சுகாதார அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடித்தில் தெரிவித்துள்ளதாவது,

வவுனியா மாவட்டத்தில் விவசாய பொருளாதார அமையம் அமைவது சாலச்சிறந்ததாகும். எனினும் நிலத்தடி நீரை விரயமாக்கும் வகையிலும் வயல் நிலங்களை இல்லாமல் செய்யும் செயற்பாடாக இவை அமையக்கூடாது.

ஏற்கெனவே தனியார் பேரூந்து நிலையத்துக்காக விவசாய ஆராய்ச்சி நிலையத்துக்கு உரிய காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் மேலும், அப்பகுதியில் உள்ள வயல் நிலங்களை சுவீகரிக்காது வவுனியா பண்ணையில் வடக்கு பகுதியில் உள்ள மேட்டு நிலத்தை பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு அடையாளம் காணும்மாறும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .