2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது

Niroshini   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லாலை பகுதியில் வைத்து, ஆமை இறைச்சியுடன் 55 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை(09) அதிகாலை கைது செய்துள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது சந்தேக நபரிடம் இருந்து 2½ கிலோ கிராம் இறைச்சி கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

மல்லாகம் பகுதியில் இருந்து குறித்த நபர் ஆமை இறைச்சியினை விநியோகம் செய்வற்கு சில்லாலை பகுதிக்கு எடுத்து வந்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலை அடுத்து சந்தேக நபரை கைது செய்தாக பொலிஸார் மேலும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .