2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சாராயம் வைத்திருந்த பெண்னுக்கு அபராதம்

Niroshini   / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் சட்ட விரோதமாக சாராயம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும், நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி நேற்று செவ்வாய்க்கிழமை விதித்துள்ளார்.

திருக்கோவில் பொலிஸாரால் குறித்த பெண்  திங்கட்கிழமை(08) கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த பெண்ணை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி முன்னிலையில் ஆஜர்செய்தபோது இவருக்கெதிராக ஏற்கனவே நீதிமன்றில் முன்குற்றம் உள்ளபடியால் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.

அத்துடன் சாராயம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முதியவர் ஒருவருக்கு ஏற்கனவே முன்குற்றமுள்ள படியால் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .