Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Kogilavani / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவரத்தினம் கபில்நாத்
வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கரைதுறைப்பற்று பிரதேச செயலாளராக கடமையாற்றிய திருச்செல்வம் திரேஸ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அவர் புதன்கிழமை (10) தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஏற்கனவே வவுனியா மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக பதவிவகித்த சரஸ்வதி மேகநாதன், வட மாகாணசபையின் உயர் பதவிக்கு மாற்றப்பட்டதை அடுத்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த திரேஸ்குமார் கடந்த 2004 - 2011 வரையிலான காலப்பகுதியில், மடு பிரதேச செயலாளராகவும், கடந்த 2011 - 2013ஆம் ஆண்டு வரை ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராகவும் பணியாற்றியிருந்தார்.
அத்தோடு, கடந்த 2014 - 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதிவரை கரைதுறைப்பற்று பிரதேச செயலாளராகப் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது.
தி.திரேஸ்குமார் யாழ்ப்பாணம் ஹாட்லிக்கல்லூரியின் பழையமாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .