2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இருவருக்கு மரண தண்டனை

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்டதெனியப் பகுதியில் 1999ஆம் ஆண்டு, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரைக் குற்றவாளிகளாக இனங்கண்ட இரத்தினபுரி மேல் நீதிமன்றம், நேற்று வியாழக்கிழமை (11) அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

1999.07.12 அன்று இடம்பெற்ற இக்கொலைக் குற்றவாளிகள் இருவரும் ஹோமாகம மற்றும் அநுராபுரப்  பகுதியைச் சேர்ந்த 42 மற்றும் 45 வயதுடையவர்கள் எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .