2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வவனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாயலத்தின் ஆசிரியர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டமையை கண்டித்து, பாடசாலை மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாயலத்தில் விளையாட்டுத்துறை ஆசிரியராக கடமையாற்றிய ந. சுந்தராங்கன் என்ற ஆசிரியர், மாணவர்களின் பாடசாலைக்கு ஒவ்வாத சீருடை தொடர்பாக நடவடிக்கை எடுத்தமையாலும் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் மகனது சீருடை தொடர்பாகவும் நடவடிக்கை எடுத்தமையால் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த மாணவர்கள் இவ் இடமாற்றத்தை நிறுத்தக்கோரியே தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதேவேளை, வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாயலத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்த மாணவர்கள் பின்னர் பாடசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள வலயக்கல்வி அலுவலகத்தின் வாயிலையும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் ஏ9 வீதியில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமையால் பொலிஸார் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர்செய்திருந்ததுடன் பொலிஸாரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் வவுனியா தெற்கு கல்வி வலயத்துக்குள் பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தபோது பொலிஸாரின் பின்புறமாக பாதுகாப்பான முறையில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த கல்வித்திணைக்கள அதிகாரியொருவர் ஊடகவியலாளர்களை வெளியே செல்லுமாறு பணித்ததுடன் செய்தியை பூதாகாரமாக்க வேண்டாம் எனவும் எச்சரித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .