2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இரத்த வங்கிக்கு இரண்டு குளிரூட்டிகள் கையளிப்பு

Niroshini   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள இரத்த வங்கிக்கு இரண்டு குளிரூட்டிகள் காத்தான்குடி அப்துல் ஜவாத் ஆலீம் நம்பிக்கை நிதியத்தினால் நேற்று(11) வழங்கி வைக்கப்பட்டன.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.ஜாபீரிடம் அப்துல் ஜவாத் ஆலீம் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் மௌலவி ஏ.ஜே.அப்துர் ரவூப் மிஸ்பாஹி இந்த குளிரூட்டிகளை கையளித்தார்.

இந்த வைபவத்தின் போது, காத்தான்குடி நகர சபையின் முன்னாள் பிரதி தலைவரும் அப்துல் ஜவாத் ஆலீம் நம்பிக்கை நிதியத்தின் நிதி முகாமைத்துவப் பணிப்பாளருமான எம்.ஐ.எம்.ஜெஸீம், அதன் செயலாளர் மௌலவி கே.ஆர்.எம்.சஹ்லான் றப்பானி, காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் ஏ.எல்.டீன் பைறூஸ் அதன் செயலாளர் எம்.எச்.எம்.அன்வர் அதன் உப தலைவர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா உட்பட பலர் கந்துகொண்டனர்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய காத்தான்குடியிலுள்ள சமூக சேவை நிறுவனங்கள் மார்க்கப் பிரசார அமைப்புக்கள் உதவுமாறு காத்தான்குடி மீடியா போரம் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள இரத்த வங்கிக்கு காத்தான்குடி அப்துல் ஜவாத் ஆலீம் நம்பிக்கை நிதியம் மேற்படி இரண்டு குளிரூட்டிகள் மற்றும் அதற்கான மாபிள் கற்கள் என்பன இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.

சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான இப் பொருட்கள் வழங்கப்பட்டதாக காத்தான்குடி நகர சபையின் முன்னாள் பிரதி தலைவரும் அப்துல் ஜவாத் ஆலீம் நம்பிக்கை நிதியத்தின் நிதி முகாமைத்துவப் பணிப்பாளருமான எம்.ஐ.எம்.ஜெஸீம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .