2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அதிபர் போட்டிப் பரீட்சையில் மருதமுனையில் 17 பேர் சித்தி

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.எ.காதர்

2015ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட இலங்கை அதிபர் சேவைக்காக 111ஆம் தர அதிபர்களைத் தெரிவு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் இலங்கை முழுவதும் 4079 பேர் சித்தியடைந்து நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் மருதமுனையில் நான்கு பெண்கள் உட்பட 17 பேர் சித்தியடைந்துள்ளனர். இவர்களுக்கான நேர்முகப் பரீட்சை விரைவில் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மருதமுனையில் என்.எம்.எம்.முபீன், எஸ்.சஹீட், ஏ.எம்.சிறின்தாஜ், எஸ்.எச்.எஸ்.ஹர்ஜது, எம்.சி.அப்துல் நஸார், எம்.ஐ.எம்.ஜஹூபர், ஏ.முஜீபுர் ரஹ்மான், எச்.முகம்மட் நியாஸ், ஏ.ஆர்.நூறுல் மன்பூஸா, எஸ்.முகம்மட் ஜூகைறுடீன், எம்.ஐ.ஜாபிர், எச்.நைறூஸ்கான், எம்.எம்.முகம்மட் மஸீன், எம்.எம்.முகம்மட் அனஸ், எம்.பி.அகமட் ராஜி, திருமதி.லுத்தீப் ஹூசையின், எம்.எம்.ஹஸ்மி ஆகியோரே சித்தியடைந்தவர்களாவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .