2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வீதியில் மயங்கி கிடந்த பெண் வைத்தியசாலையில் உயிரிழப்பு

Niroshini   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எஸ்.கர்ணன்

நெல்லியடி – கொடிகாமம் வீதியில் இன்று வெள்ளிக்கிழமை மயங்கிக் கிடந்த பெண்ணொருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வீதியில், கன்கொல்டலை என்னும் இடத்தில் மயங்கிக் கிடந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க குறித்த பெண்ணை அப்பகுதி மக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், அப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் தொடர்பில் எவ்வித விபரங்களும் தெரியாது எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X