2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

450CC க்கும் அதிக வலு கொண்ட மோட்டார் சைக்கிளுக்கு அனுமதி

George   / 2016 மார்ச் 30 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு சேவைக்கு மட்டும் மட்டுபடுத்தப்பட்டு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள 450CC க்கும்  அதிக வலு கொண்ட மோட்டார் சைக்கிள், சாதாரண போக்குவரத்துக்கு பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

இந்த வகை மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்யும் நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக  மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இதுவரை கிடைக்கப்பெற்ற கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

கலந்துரையாடலை அடுத்து? 450CC க்கும் அதிக வலு கொண்ட மோட்டார் சைக்கிள்களை போக்குவரத்துக்கு பயன்படுத்தல் தொடர்பில் புதி சட்ட விதிகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவதாக அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .