2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

கிணற்றிலிருந்து மிதிவெடிகள் மீட்பு

Princiya Dixci   / 2016 மார்ச் 30 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

அண்மையில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பலாலி தெற்கு வசாவிளான் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து 3 ஜொனி ரக மிதிவெடிகள், நேற்று செவ்வாய்க்கிழமை (29) மீட்கப்பட்டதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி கிணற்றை துப்பரவு செய்யும் போது, சேற்றில் புதையுண்ட நிலையில் இந்த 3 மிதிவெடிகளும் இனங்காணப்பட்டு, அருகிலுள்ள இராணுவ முகாமுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸாரும் இராணுவத்தினரும் வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .