2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியின் கருத்துக்கு வரவேற்பு

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே.எல்.ரி.யுதாஜித், வடிவேல் சக்திவேல், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

'நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படுத்தவோ அல்லது நாட்டை பிரிப்பதற்கோ ஒருபோதும் இடமளியோம்' என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்தை தாம் வரவேற்பதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

'வடக்கு - கிழக்கை இணைத்து சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்துவதற்கு வடமாகாண சபை அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இத்தீர்மானம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு, இன ஒற்றுமைக்கும் பங்கம் ஏற்படுத்தும் என நாங்கள் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் தனது நிலைப்பாட்டினை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதனை நாங்கள் வரவேற்கின்றோம். 

இனப் பிரச்சினைக்குத் தீர்வாக வடக்கு - கிழக்கு மீள் இணைக்கப்பட்டு சமஷ்டி முறையிலான சுயாற்சி வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக உள்ளது. இந்நிலைப்பாடு முஸ்லிம் சமூகத்துக்குப் பெரும் பாதிப்பாக அமையும். ஆகவே, நாங்கள் வடக்கு - கிழக்கு இணைப்புக்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கின்றோம். 

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். 

ஆனால், வடக்கு - கிழக்கு இணைப்பு மூலம் மாத்திரமே தீர்வு காணப்பட முடியும் என்பது பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையாது. மாறாக இனங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்துவதாக அது அமையும்'; என எச்சரிக்கை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .