2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றியவருக்கு அபராதம்

Niroshini   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அனுமதிப்பதிரமின்றி சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் பொலிஸாரின் கடமையை செய்யவிடாது தடங்கள் ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்காக 100 ரூபாய் அபராதமும் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி இன்று (28) வியாழக்கிழமை விதித்துள்ளார்.

அக்கரைப்பற்று பொலிஸாரால் குறித்த நபர் கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபரை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி முன்னிலையில் இன்று (28) ஆஜர்செய்தபோதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .