2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

லக்கல கான்ஸ்டபிள் கைது

Kanagaraj   / 2016 ஏப்ரல் 28 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை, லக்கல பொலிஸில் துப்பாக்கிகள் காணாமல்போன சம்பவம் தொடர்பில், ஆயுதங்களுக்கு பொறுப்பாகவிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் குற்றப்புலனாய்வு பிரிவு திணைக்களத்தினரால் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

காணாமல் போன சகல துப்பாக்கிகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிக பரிசோதனைகளுக்காக அவை இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்கள் காணாமல்போன தினத்தன்று சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் மூவர், சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர். அவர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .