2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நிர்வாணத்தை காட்டி பணம் பறித்தவர் கைது

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு பிள்ளைகளின் 40 வயது தாயொருவரின் நிர்வாணப்படங்களை காண்பிப்பதாக பயமுறுத்தி அவரிடமிருந்து சுமார் ஒன்றரை கோடி ரூபாவை கப்பமாக பெற்றதாக கூறப்படும் 28 வயதான இளைஞனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

சந்தேகநபரான 28 வயதான அவ்விளைஞன், குருநாகல் பிரதேசத்தில் உணவகமொன்றில் முகாமையாளராக கடமையாற்றியுள்ளார். அவருக்கும், அந்த உணவகத்துக்கு, உணவு வாங்குவதற்கு வந்துசெல்லும் குருநாகல் நகரத்தில் பிரசித்தி பெற்ற வர்த்தகர் ஒருவரின் மனைவியான (வயது 40) இரண்டு பிள்ளைகளின் தாய்க்கும் இடையில் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், இவ்விருவரும் குருநாகல் நகரத்துக்கு வெளியில் உள்ள இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இவருவருக்கும் இடையிலான தகாத உறவின்போது, அவ்விளைஞன் அப்பெண்ணை நிர்வாணமாக, பல்வேறு கோணங்களிலும் படங்களைப் பிடித்துக்கொண்டுள்ளார்.

அப்பெண், பணவசதி படைத்தவர் என்பதனை அறிந்துகொண்ட குறித்த இளைஞன், பெண்ணின் நிர்வாணப்;படங்களை கணவனிடம் காண்பிக்கப்போவதாகவும், இணையத்தளங்களில் தரவேற்றம் செய்ய போவதாகவும் அச்சுறுத்தி கப்பம் பெற்றுவந்துள்ளார். அதனடிப்படையில் சுமார் ஒன்றரைக்கோடி ரூபாவை அப்பெண், அவ்விளைஞனுக்கு கப்பமாக வழங்கியுள்ளார்.

அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி, அப்பெண் தன்னுடைய விலைமதிக்கத்தக்க காணியையும் விற்று பணம் கொடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. 

சந்தேகநபரின் அச்சுறுத்தலை பொறுத்துக்கொள்ள முடியாத அப்பெண், தான் ஏமாந்துகொண்டு போவதை அறிந்து, இந்த விவரங்களை தன்னுடைய கணவனிடம் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து இவ்விருவரும் பொலிஸில் செய்த முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்தே அந்த இளைஞனை, பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்.

கப்பமாக பெற்ற பணத்தில் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான காரொன்றை அவ்விளைஞன் கொள்வனவு செய்துள்ளான். அந்தக் காரை பொலிஸார் கைப்பற்றினர்.

அத்துடன், கண்டி அம்பிட்டிய பகுதியில் ஹோட்டல் ஒன்றையும் அவ்விளைஞன் கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று தெரிவித்த குருநாகல் பொலிஸார் இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X