2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வருடாந்த ஒன்றுகூடலும் கௌரவிப்பு நிகழ்வும்

Gavitha   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

கிழக்கு மாகாண நூலக பணிப்பாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த ஒன்றுகூடலும், ஓய்வு பெற்ற நூலகர்களை கௌரவிக்கும் நிகழ்வும் எதிர்வரும் திங்கட்கிழமை 02ஆம் திகதி காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக நூலக பணிப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் எம்.ரீ. சபருள்ளாகான் இன்று வெள்ளிக்கிழமை (29) தெரிவித்தார்

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்கள உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது ஒன்றியத்தின் கடந்த கால மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து செயற்றிட்டங்களை முன்னெடுக்கவிருப்பதால், உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் பணிபுரியும் சகல நூலகர்கள் மற்றும் நூலக சேவகர்களையும் இந்நிகழ்வில் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு ஒன்றியத்தின் தலைவர் எம்.ரீ. சபருள்ளாகான் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .