2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நால்வருக்கு பதவி உயர்வு

Niroshini   / 2016 ஏப்ரல் 30 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவரும் உதவி பொலிஸ் மா அதிபர் இருவரும் உடன் அமுலுக்கு வரும்வகையில், பதவி உயர்வு பெற்றுள்ளதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பதவி உயர்வு வழங்குவதற்கான தகுதியிருந்தபோதும், அவர்களுக்கு அரசியல் பழிவாங்கலால் காரணமாக பதவி உயர்வு கடந்த காலத்தில் வழங்கப்படாமல் இருந்த நிலையில், பொலிஸ் மா அதிபர், இவர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பதவி உயர்வு வழங்கியுள்ளார்.

இதில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான சி.ஏ.பிரேம சாந்த, எச்.எச். சுறசிறி ஆகியோர் உதவி பொலிஸ் மா அதிபராகவும் உதவி பொலிஸ்மா அதிபராக இருந்த எச்.ஏ.டி. குணசாந்த, எஸ்.பி. லதீப் ஆகியோருக்கு சிரேஷ்ட உதவி பொலிஸ்மா அதிபராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .