2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முல்லேரியாவில் துப்பாக்கி பிரயோகம்: ஒருவர் பலி

Niroshini   / 2016 ஏப்ரல் 30 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லேரியா, பெதியாகொடை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிரிபத்கொடை, மாகொலை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த நபர் பொதுமக்கள் எதவியுடன்  முல்லேரியா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டபோதும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .