2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Niroshini   / 2016 மே 01 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு பின்புறமாகவுள்ள பற்றைக்காட்டுக்குள் இருந்து உருக்குலைந்த நிலையில், 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம், நேற்று சனிக்கிழமை (30) மாலை மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

விறகு வெட்டச் சென்றவர்கள் பற்றைக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதை கண்டு சென்று பார்த்தபோது, நெஞ்சுப்பகுதி காட்டு விலங்குகளால் உண்ணப்பட்டு உருக்குலைந்த நிலையில்இச்சடலம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, தடஅறிவியல் பொலிஸாருடன் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் புலன்விசாரணைகளை மேற்கொண்டனர்.

அண்மையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து காணாமல் போயுள்ளதாகவும் மேற்படி சடலம் காணாமல் போயிருந்தவருடையதாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .