2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வாள்வெட்டுச் சம்பவத்தில் 3 பேர் படுகாயம்

Suganthini Ratnam   / 2016 மே 01 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா .சரவணன்

அம்பாறை, ஆலையடிவேம்பு  வீரமா கோவிலுக்கு அருகில்  இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீரமா கோவிலுக்கு அருகில் நேற்று சனிக்கிழமை மாலை வீதியில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த  ஒரு குழுவினருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த  உழவு இயந்திரத்தில் அவ்வழியால் வந்த குழுவினருக்கிடையிலும் வாய்த்தர்க்கம் முற்றியது. இந்நிலையில், உழவு இயந்திரத்தில் வந்தவர்கள் வாளால் வீதியில் நின்ற குழுவினர் மீது வாளால் வெட்டியுள்ளனர். இதன்போது இருவர் படுகாயமடைந்தனர்

இந்த நிலையில் சண்டையை தடுக்க முற்பட்ட மற்றுமொருவரும் வாள்வெட்டுக்கு இலக்காகினர். வாளால் வெட்டியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதுடன். படுகாயமடைந்த மூவரும்; அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இச் சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .