2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு விவசாயிகளிடம் வேண்டுகோள்

George   / 2016 மே 02 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

வரட்சியான காலநிலையை கருத்திற்கொண்டு சிறுபோக நெற்செய்கையில் நீரை சிக்கனமாக பயன்படுத்தி வீண்விரயத்தைத் தவிர்க்குமாறு கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன், கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடரும் வரட்சி, சிறுபோக நெற்செய்கையில் தாக்கத்தினைச் செலுத்தாவிட்டாலும் கூட, குளங்களின் நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தாவிட்டால் பயிர்ச்செய்கையின் இறுதிக்கட்டங்களில் நீர்; நெருக்கடி ஏற்படக்கூடிய நிலைமை காணப்படுகின்றது.

எனவே, நீரினை சிறந்தமுறையில் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் சிறுபோகத்தில் பெரும் வெற்றியினை பெறமுடியும்' என அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .