2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பரிசளிப்பு விழா

Sudharshini   / 2016 மே 02 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.எம்.எ.காதர்

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் அதன் கொழும்பு கிளையுடன் இணைந்து ஏற்பாடு செய்த ஷம்ஸ் தின நிகழ்வும் 2015ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழாவும் பாடசாலையின் அன்வர்தீன் அரங்கில் சனிக்கிழமை(30) நடைபெற்றது.  

கல்லூரியின் அதிபரும் பழைய மாணவர் சங்கத்தின் தலைவருமான எஸ்.எம்.எம்.அமீர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ஷம்ஸ் மத்திய கல்லூரியின் கல்விசார், கல்வி சாரா துறைகளில் 2015ஆம் ஆண்டு திறமைகளை வெளிக்காட்டி பாடசாலைக்கு பெருமை சேர்த்த பாடசாலையின் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பழைய மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X