2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 03/05/2016

Princiya Dixci   / 2016 மே 03 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அன்பாகப் பழகும் ஒருவரைப் பற்றிச் சிலர் அவதூறாகப் பேசுவதுமுண்டு. இவர் என்னவோ மாயம் வசியம் செய்து வசப்படுத்துகிறார் என்று கூறி, அன்பானவர்கள் மனதைப் புண்படுத்திவிடுவார்கள்.

சொந்த நலனுக்காக, ஒருவர் மேல் அக்கறையுடன் பேசி நடிப்பவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், எந்தவித எதிர்பார்ப்புக்களுமின்றிப் பழகுபவர்களை இஷ்டப்படி கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் காழ்ப்புணர்வுதான் காரணமாகும்.

ஒருவரைச் சுற்றிப் பலர் இருப்பதற்கு அவர்களது அரவணைப்பான குணாம்சங்களே பிரதான காரணமாகும். 

நெஞ்சில் வஞ்சகம் அற்றவர்களைத் தேடி நின்றால் துன்புறும் மாந்தரும் பெரும் பயன்பெறுவர்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .