2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கலாபூஷண விருதுக்கு விண்ணப்பம் கோரல்

Princiya Dixci   / 2016 மே 03 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப். முபாரக்

கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷண விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கமைவாக நாட்டிலுள்ள நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியக் கலைஞர்கள், சிற்பக் கலைஞர்கள், பொம்மலாட்டக் கலைஞர்கள், தற்காப்புக் கலைஞர்கள், நடனம், தாள வாத்தியம், இசை, மஜிக், கிராமியக் கலை, கவி, திரைப்படம் மற்றும் வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் தமக்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று இவ்விருது வழங்கும் நிகழ்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

60 வயதுக்கு மேற்பட்ட கலைத்துறைகளில் ஈடுபாடுடையவர்கள் அனைவரும் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X