Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
George / 2016 மே 03 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால், செவ்வாய்க்கிழமை (03) உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் 1 விசைப்படகுடன் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் மற்றும் கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி நெடுந்தீவுக்கு வடக்குப் பகுதியில் 1 விசைப்படகுடன் கைது செய்யப்பட்ட ஜெகதாப்பட்டிணத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் ஆகியோரின் விளக்கமறியலே நீடிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள், யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்களால் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .