2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐவருக்கு மரண தண்டனை விதிப்பு

Menaka Mookandi   / 2016 மே 03 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவை, லுனாவ பிரதேசத்தில் நபரொருவரைக் கொலை செய்த குற்றவாளிகள் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்து, பாணந்துறை மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (03) தீர்ப்பளித்தது.

லுனாவ பிரதேசத்தைச் சேர்ந்த குற்றவாளிகள் ஐவருக்கே, இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேற்படி வழக்கிலிருந்து இரண்டாவது சந்தேகநபரை விடுவித்த மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆரச்சி, கடும் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியிருந்த ஏனைய ஐவரையும் குற்றவாளிகள் என அறிவித்ததுடன் அவர்களுக்கு மரண தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .