2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கஞ்சா வைத்திருந்த நபருக்கு அபராதம்

Princiya Dixci   / 2016 மே 03 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா
 
அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் கேராள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைத்தப்பட்டிருந்த நபருக்கு, 07 ஆயிரத்தி 500 ரூபாய் அபராதம் விதித்து அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும், நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய திருமதி நளினி கந்தசாமி, இன்று செவ்வாய்க்கிழமை (03) தீர்ப்பளித்தார். 
  
அக்கரைப்பற்று பொலிஸாரால் குறித்த நபர் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.
 
இவ் வழக்கு விசாரணை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும், நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய திருமதி நளினி கந்தசாமி முன்னிலையில் இன்று (03) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது 07 ஆயிரத்தி 500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .