2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கலைநேசனை மனைவி சந்திக்க அனுமதி

Suganthini Ratnam   / 2016 மே 04 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரான பிரபா என்று அழைக்கப்படும் கலைநேசனை (வயது 46) என்பவரை அவரது மனைவி கொழும்புக்குச் சென்று நேரில் சந்தித்து நலம் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.  

இவர், மட்டக்களப்பில் வைத்து பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் (ரி.ஐ.டி) திங்கட்கிழமை (02) காலை கைதுசெய்யப்பட்டார்.  கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ள கலைநேசன் தற்சமயம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

விசாரணைக்கு முகம்கொடுத்து வரும் தனது கணவருடன் ஏற்கெனவே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரிக்க தான் அனுமதிக்கப்பட்டதாகவும் அவரது மனைவி கயல்விழி தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை  கலைநேசனை நேரில் சென்று பார்த்து நலன் விசாரிக்க காத்தான்குடி பொலிஸார் ஊடாக செவ்வாய்க்கிழமை (03) மாலை அவரது மனைவிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

மட்டக்களப்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இந்த விடயம் கொண்டு செல்லப்பட்டதன் ஊடாக கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு தலைமையகமும் இந்த விடயத்தில் அக்கறை எடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக் குழுவின் மட்டக்களப்பு அலுவலக அதிகாரி தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .