2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்து சென்றது இலங்கை

Shanmugan Murugavel   / 2016 மே 04 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான முழுமையான கிரிக்கெட் தொடரொன்றுக்காக, இங்கிலாந்து நோக்கி இலங்கை அணி, இன்று புறப்பட்டுச் சென்றது.

இங்கிலாந்து அணிக்கெதிரான 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஆகியனவற்றிலும், அயர்லாந்துக்கெதிரான இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது.

இந்தத் தொடருக்காக விளையாடுவதற்கு முன்னர், இலங்கை அணியின் வீரர்கள், சுற்றுலா ஒப்பந்தமொன்றில் இலங்கை கிரிக்கெட் சபையுடன் கைச்சாத்திட்டனர். இலங்கை வீரர்களின் வருடாந்த ஒப்பந்தம், இவ்வாண்டு பெப்ரவரியிலேயே நிறைவடைந்த போதிலும், ஏப்ரல் வரை அது நீடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, இங்கிலாந்துத் தொடருக்கு முன்னதாக, தொடருக்கான ஒப்பந்தத்தில், இலங்கை வீரர்கள் கைச்சாத்திட்டனர்.

இதன்படி, இரண்டு மாதங்கள் நீடிக்கவுள்ள இந்தத் தொடரில், அணியின் முன்னணி வீரர்கள் மூவர், மாதமொன்று 1.5 மில்லியன் ரூபாயும் அடுத்த நிலை வீரர்கள் மாதமொன்றுக்கு 1.2 மில்லியன் ரூபாயும் மூன்றாம் நிலை வீரர்கள், மாதமொன்றுக்கு 1.05 மில்லியன் ரூபாயும் அடுத்த நிலை வீரர்கள் மாதமொன்றுக்கு 900,000 ரூபாயையும் பெறவுள்ளனர். இவை தவிர, போட்டியில் பங்குபற்றுவதற்காக வழங்கப்படும் ஊதியம், மேலதிகமானதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X