2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நம்பிக்கைதான் வாழ்வின் வழிகோல்...

Princiya Dixci   / 2016 மே 20 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நம்பிக்கைதான் நல்ல வாழ்வை அமைக்க வழிகோலும்.

வாழ்க்கையில் வெறுப்புக்கொண்டவர்கள், உலகம், தங்களுக்கு எதிராக செயற்படுகிறது எனச் சொல்வார்கள். வாழ்க்கையில் ஏதாவது வெற்றிக்கொண்டவர்களோ, தங்களுக்கு எல்லாமே கிடைத்து விட்டதாக உலகத்தை மெச்சிக் கொள்வார்கள், மேலும் சிலர் கிடைத்தவைப் பற்றி எக்காளமிடுவதுமுண்டு.

ஆனால், வாழ்வை முழுமையாகப் புரிந்தவர்களோ ஒன்றுமே பேசாமல் மௌனியாக இருந்து விடுகின்றனர். ஞானிகள் பேசாமல் இருப்பதே இதற்குத்தான்.

புரியாதவர்களிடம் பேசிப் பயனும் இல்லை என்றாலும் ஞானிகள் கனகச்சிதமாக உபதேசங்களை மிகச் சுருக்கமாகவும் சொன்னார்கள்.

பொறுமை சகிப்புத் தன்மை இருந்தால்தான் வாழ்க்கையில் ஒருபிடிப்பு வரும். நம்பிக்கைதான் நல்ல வாழ்வை அமைக்க வழிகோலும். நம்புக தோழர்களே.

வாழ்வியல் தரிசனம் 20/05/2016
-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .