2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பொல்லாதவர்களுடன் இல்லாதவன் இணைத்தால்...

Princiya Dixci   / 2016 மே 27 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தத் தகுதி இல்லாத ஒருவரை மிகையாகப் புகழ்வதும் அவருக்கு அடிமைபோல சேவகம் செய்து வருபவர்கள், தகைமை சால் பெருமக்களைக் கௌரவம் செய்யப் பிரியப்படமாட்டார்கள்.

இத்தகைய பிரகிருதிகள், தங்கள் வாழ்நாள் பூராவும் ஏமாற்றங்களையும் அவமானங்களையும் சந்தித்த வண்மாக இருப்பார்கள்.

வாழ்க்கையில் கஷ்டப்படாமல் இருக்க யாரையாவது அண்டிப்பிழைப்பதே ஒரே வழி என கண்டிப்பான கொள்கையில் இருப்பவர்கள் தங்கள் சுயத்தை இழந்தவர்களேயாவர்.

காலம் செல்லச் செல்ல இந்த அடிமை வாழ்வு, ஒருவனைக் குற்றியுரும் குலை உயிருமான வேதனைகளை ஏற்படுத்தலாம்.

பொல்லாதவர்களுடன் இல்லாதவன் இணைத்தால், எல்லா பொல்லாப்பும் வந்து சூழும்.


வாழ்வியல் தரிசனம் 27/052016
-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .