2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சியில் நடைபவனி

Suganthini Ratnam   / 2016 மே 27 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

-சண்முகம் தவசீலன்

மதுபாவனைக்கு எதிரான வாசகங்களை தாங்கிய வண்ணம், கிளிநொச்சியின் வளமான எதிர்காலத்துக்கான இளைஞர் சக்தி என்னும் தொனிப்பொருளில், வியாழக்கிழமை(26), நடைபவனியொன்று நடைபெற்றது.


இந்நடைபவனி, கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து ஆரம்பித்து, கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரையில் சென்றடைந்தது. வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் சேவை மன்றமும் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.


வட மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கிளிநொச்சி தேசிய இளைஞர் சேவை மன்ற பொறுப்பதிகாரிகள் உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .