2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'ராஜபக்ஷக்கள் நன்றியுணர்வு இல்லாதோர்'

Kogilavani   / 2016 மே 30 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டமை, தான் செய்த மிகப்பெரிய தவறாகும் என்று தெரிவித்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, ராஜபக்ஷக்கள், நன்றியுணர்வு இல்லாதோர் என்றும் கூறினார்.

கதிர்காமத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ராஜபக்ஷக்களுக்கு நான், விசுவாசமானவனாகவே இருந்தேன். எனினும், மக்களுக்குச் சேவையாற்ற முடியாத அமைச்சொன்றையே எனக்குக் கையளித்தனர். மக்கள் தொடர்பு அமைச்சின் ஊடாக, என்னால் எதனையும் செய்யமுடியாமல் போய்விட்டது.

நன்றியுணர்வே சிறந்த மக்களின் குணமாகும். எனினும், ராஜபக்ஷக்களுக்கு அந்த நன்றியுணர்வே இல்லை' என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .