2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அனர்த்தப்பொதி தயாரா?

Kogilavani   / 2016 மே 30 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

திடீர் அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுப்பதற்கான நிலைமையொன்று ஏற்படுமாயின், உடனடியாக எடுத்துச்செல்லக்கூடிய பொருட்கள் அடங்கிய அனர்த்தப் பொதியொன்றைத் தயாராக வைத்திருக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய பிரதேசங்களில் வசிப்போருக்கே, இவ்வாறான அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.

கல்விச்சான்றிதழ்கள், அடையாள அட்டைகள், காணி உறுதி, பணம், தங்க நகைகள், டோர்ச், அத்தியாவசியமான மருந்துகள் ஆகியன அடங்கிய பொதியையே, தயாராக வைத்திருக்குமாறு அந்நிலையம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .