2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கடத்தல் வாகனங்களால் வீதி சேதம்

George   / 2016 மே 30 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு துணுக்காய், கொக்காவில் - புத்துவெட்டுவான் வீதி சேதமடைந்து மிக மோசமான நிலையில் உள்ளதால் அதனை புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பழையமுறிகண்டி, புத்துவெட்டுவான், ஐயன்கன்குளம் ஆகிய கிராமங்களின் அபிவிருத்திச் சங்கங்கள்;, துணுக்காய் பிரதேச செயலாளரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.

மீள்குடியேற்றத்தின் பின்னர் இந்த வீதி புனரமைப்புச் செய்யப்பட்டதுடன் பழையமுறிகண்டி, புத்துவெட்டுவான், ஐயன்கன்குளம் ஆகிய கிராமங்களிலிருந்து சட்டவிரோதமாக மணல் மற்றும் காட்டு மரங்களை கடத்த பயன்படுத்தும் கனரக வாகனங்களின் போக்குவரத்தால் இந்த வீதி சேதமடைந்துள்ளதாக குறித்த சங்கங்கள் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .