2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பாதுகாப்பற்ற குழியில் விழுந்து குழந்தை பலி

Sudharshini   / 2016 மே 30 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கபுரம் பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த கஜேந்திரன் தர்சாந்த்  என்ற 1 ½ வயது குழந்தை, பாதுகாப்பற்ற குழியொன்றில் விழுந்து நேற்று (29) உயிரிழந்துள்ளது.

வீட்டு வளவில் தோன்றப்பட்டிருந்த குழியொன்றில் மழைநீர் நிரம்பியிருந்துள்ளது. வெளியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, அந்த குழியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.

சடலம் தோப்பூர் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .