2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

500 கிலோகிராம் வெள்ளைச் சந்தனம் ஆயுர்வேதத்துக்கு கையளிக்கப்பட்டது

Princiya Dixci   / 2016 மே 31 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜனனி ஞானசேகரன்

சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான 500 கிலோகிராம் (அரைடொன்) நிறைகொண்ட அரியவகை வெள்ளைச் சந்தன துண்டுகளை, இலங்கை சுங்கம், இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தானபத்திடம் இன்று செவ்வாய்க்கிழமை (31) கையளித்தது.

சட்டவிரோதமான முறையில் இந்நாட்டுக்குள் இறக்குமதி செய்வதற்கு முயன்றபோது, இலங்கை சுங்கத்தினால் கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட வெள்ளைச்சந்தன துண்டுகளே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன.

ஜூன் மாதம் 5ஆம் திகதியன்று கொண்டாடப்படவிருக்கின்ற உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டே இவை கையளிக்கப்பட்டன. 

வெள்ளைச்சந்தன துண்டுகளை கையளிக்கும் வைபவம், நாவிட்ட ஆயுர்வேத கூட்டுத்தாபன வளாகத்தில் இடம்பெற்றபோது, இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகம் டப்ளியு. ஏ. சூலானந்த பெரேரா மற்றும் இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தில் தலைவர் லால் விக்கிரமசிங்க ஆகியோர் பங்கேற்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .