2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

'தன்னைப் பற்றியே பெருமை பேசுவது அறியாமை'

Princiya Dixci   / 2016 ஜூன் 01 , மு.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தப் பரந்த உலகில், கோடான கோடி, பல்வகைப்பட்ட உயிரினங்கள் ஜீவிக்கின்றன. விலங்கினம், மீன் இனம், தாவர இனம், பறவைகள், பூச்சிகள் எனப் பலவாகும். கடலில் வாழும் உயிரினங்கள் பற்றிச் சொல்லிட முடியாது.

இந்த இனங்கள் ஒவ்வொன்றுக்குமே, அவை அவைக்கெனத் தனிஉலக வாழ்க்கை முறைகள் உண்டு. இவைகளில் ஓர் இனமே மனித இனமாகும்.

மேற்குறிப்பிட்ட அனைத்து இனங்களுமே, மனித இனத்துக்குக் குறைவானவையும் அல்ல. அவைகள் பார்வையில், நாங்களும் ஏதோவோர் இனம் தான்.

புலனறிவு, இயங்கும் திறன், அதீத மோப்ப சக்தி, உடல் வலு எனப் பலமான சக்திகளை, ஆண்டவன், அவைகளுக்கு அளித்துள்ளான்.

அவை வாழும் சூழலுக்கு ஏற்ப எம்மால் வாழ முடியாது. இது அதிசயமான வாழ்க்கை முறைதான். மனிதன், தன்னைப் பற்றியே பெருமை பேசுவதும் அறியாமைதான். நாங்கள், இயந்திரத்தின் உதவிமூலம் இயங்குகின்றோம். அவைகளுக்கோ, அவைகளின் உடம்பே இயந்திரம்தான்.

அவைகளால் முடிந்த காரியங்கள் எதனை எம்மால் செய்யமுடியும். 

வாழ்வியல் தரிசனம் 01/06/2016
-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .