2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக வெட்டப்பட்ட முதிரை மரக்குற்றிகள் சிக்கின

George   / 2016 ஜூன் 01 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓமந்தை பெரியகுளம் காட்டுப்பகுதியில் வெட்டப்பட்டு, பூந்தோட்டம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த முதிரை மரக்குற்றிகளை செவ்வாய்க்கிழமை மாலை கைப்பற்றியதாக வவுனியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த இடத்துக்குச் சென்ற அதிகாரிகள், பெறுமதிவாய்ந்த சுமார் 13 முதிரை மரக்குற்றிகள் மற்றும் மரக்குற்றிகளை அடுக்கி வைத்திருந்த லொறியையும் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகளின் பெறுமதி சுமார் ஒரு இலட்சம் ரூபாய் எனவும் சந்தேகநபர்கள் தப்பிசென்ற நிலையில், வாகனத்தின் அனுமதிப் பத்திரங்களை கைப்பற்றியுள்ளதாகவும் அந்த அதிகாரிகள் மேலும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .